Sunday 19th of May 2024 08:09:01 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஜிந்துப்பிட்டி கொரோனா தொற்றாளரின் குடும்பத்தவர் 10 பேர் உள்ளிட்ட 50 பேருக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை!

ஜிந்துப்பிட்டி கொரோனா தொற்றாளரின் குடும்பத்தவர் 10 பேர் உள்ளிட்ட 50 பேருக்கு பீ.சீ.ஆர். பரிசோதனை!


கொழும்பு ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்த, இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மாலுமி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடைய குடும்பத்தவர்கள் 10 பேர் உள்ளிட்ட 50 பேருக்கு பீ.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதியைச் சேர்ந்த 29 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் இனம் காணப்பட்டு கந்தக்காடு தனிமைப்டபடுத்தல் நிலையத்திற்கு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 153 பேரில் தொற்றாளரின் குடும்பத்தவர்கள் 10 பேர் உள்ளிட்ட 50 பேருக்கு இன்றைய தினம் பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 50 பேரில் யாருக்கும் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE